எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்

⁠பொதுமக்களின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பாராளுமன்ற பொறுப்புணர்வை பேணுவதிலும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம், இலங்கையின் சனநாயக உரையாடலை வலுப்படுத்துதல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் (1/2)
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் (2/2)

எங்கள் பார்வை, பணி மற்றும் நோக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், இலங்கையின் சனநாயக ஆட்சிக்காக எமது பணி மற்றும் அர்ப்பணிப்பை வடிவமைக்கும் தெளிவான கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.

தூர நோக்கு
அரசாங்கத்தை மேற்பார்வைக்கு உட்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாதல்.
செயற்பணி
அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மக்கள் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், பாராளுமன்றத்தின் பொறுப்பு மற்றும் செயற்பாட்டினை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் இறைமையைப் பாதுகாத்து, அனைத்து மக்கள் பிரிவினருக்கும் நீதியை நிறைவேற்றும் சமூகத்திற்காக ஆட்சியின் பலவீனங்கள் மூலம் எழும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி முன்னெச்சரிக்கையை வழங்கி, ஓரங்கட்டப்பட்ட மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தி முற்போக்கான மேற்பார்வை மற்றும் நேர்மறையான மாற்றுக் கொள்கைகள் மற்றும் தீர்வுகளை அனைத்து மக்கள் பிரிவினருக்கும் வழங்குதல்

நோக்கம்

பாராளுமன்ற நடவடிக்கைகள், பொதுப் பொறுப்புகள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பு, ஆவணங்களைத் தயாரித்தல், தகவல் சேகரிப்பு மற்றும் பௌதீக வசதிகளை வழங்குதல் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

  1. 1பாராளுமன்ற நடவடிக்கைகள், பொதுப் பொறுப்புகள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கான நிர்வாக ஒருங்கிணைப்பு, ஆவணங்களைத் தயாரித்தல், தகவல் சேகரிப்பு மற்றும் பௌதீக வசதிகளை வழங்குதல் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  2. 2அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளை கண்காணித்து தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அரச கொள்கைகளை ஆராய்ந்து செயலாற்றுகை அறிக்கைகளைத் தயாரித்து எதிர்க்கட்சியின் மூலோபாய பதில்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  3. 3அரசாங்கத்தால் முன்மொழியப்படும் திட்டங்கள் குறித்து நிபுணத்துவக் கருத்துகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் சுருக்கமான கொள்கைக் குறிப்புகளை தயாரித்து பாராளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க பதிலளிப்பதற்கு வசதிகளை வழங்குதல்.
  4. 4அபிவிருத்திக்கான மாற்றுக் கொள்கை கட்டமைப்பு மற்றும் நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க நிபுணத்துவக் கொள்கை உருவாக்குநர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்தல் மற்றும் முறையான விரிவான மாற்றுகள் மூலம் அரசாங்க முன்மொழிவுகளுக்கு தேசிய சவால்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  5. 5நிர்வாகத்தின் பலவீனங்களை கணித்து சனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த காலத்துக்கேற்ற கண்காணிப்பு மூலம் எதிர்க்கட்சியின் பதில்களுக்கு வலையமைப்பு அடிப்படையிலான முறைமையை உறுதிப்படுத்துதல்.
  6. 6தகவல் பிரவேச வாய்ப்புகளை உறுதிசெய்து, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்த எதிர்க்கட்சியின் சவால்களை பாராளுமன்ற கேள்விகள் மற்றும் குழுக்கள் மூலம் வினவுவதற்கு வசதிகளை வழங்குதல்.
  7. 7எதிர்க்கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் உறுப்பினர்களையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக ஒருங்கிணைத்தல், அதற்கான வளப் பகிர்வு மூலம் அரசாங்கத்தின் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்துவதற்கான பொறுப்பு.
  8. 8எதிர்க்கட்சியின் நோக்கங்களை அடைவதற்கும் மேற்பார்வை திறன்களை மேம்படுத்துவதற்கும் சிவில் சமூகம், வெகுசன ஊடகங்கள், சட்டத் துறை, பிரசைகள் குழுக்களுடன் நேரடி உறவுகளை கட்டியெழுப்புதல்.

Social Media

X / Twitter
YouTube
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் வெளியிடப்படும் Opposition Bulletin இன் 2026 பெப்ரவரி மாதம் 17-20 ஆம் திகதி வரையிலான பாராளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகம்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தால் வெளியிடப்படும் Opposition Bulletin இன் 2026 பெப்ரவரி மாதம் 03-06 ஆம் திகதி வரையிலான பாராளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகம்.
சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மகாவலி ‘கே’ வலயத் திட்டத்தின் இடம், காணி பரப்பளவு மற்றும் அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரி பதிவு மீண்டும் தொடங்க முடியுமா? அதற்கான நடவடிக்கைகள் என்ன?

திட்டங்கள்

திட்டங்கள்
Office of the National Policy Reformsfinished

Office of the National Policy Reforms

The Office of the National Policy Reform project has a crucial objective of coordinating and facilitating the policy formulation process to ensure effective policy development and improvement. It involves the identification of 28 Policy Sectors and their corresponding sub-sectors. During the initial phase, policy papers were drafted with inputs from the National Council for Public Consultation Project. These papers have undergone review and a second draft, and they are now being transferred to the final policy drafting committee for further refinement, with some already completed. The project aims to provide a comprehensive and well-structured policy framework that the next government can readily utilize. By creating a fundamental base for policy analysis against current government policies, the project endeavors to foster smoother policy transitions and informed decision-making for the future administration. The expected outcomes include enhanced coordination in the policy formulation process, improved policy development, and a solid foundation for addressing national issues through well-considered policies. As the next step of the project, after the policy papers have been drafted and refined, the Office of the National Policy Reform will undertake the task of conducting public advocacy and awareness campaigns as a follow up project. These campaigns aim to effectively communicate the collected policy alterations and requirements to the wider public and stakeholders.

பாராளுமன்றக் குழுக்கள்